பல மாநிலங்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்காக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை இணையவழி தளங்களில் அதிகரித்துள்ளது. கடைகளில் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தினால் நுகர்வோர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இது அதிக ஆன்லைன் விற்பனைக்கு பங்களித்துள்ளது என்று பல நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அதிகாரிகள், உலகளாவிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செபியிடம் தாக்கல் செய்யப் போகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிக்கையின்படி, . எல்ஐசி ஐபிஓ ஜனவரி மூன்றாவது வாரம் 2022 நிதியாண்டு முடிவதற்குள் வெளியிடப்படும் என்றும், அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும். அரசாங்கம் உறுதிசெய்துள்ளதால் , ஐபிஓ குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்ற கூற்றுகளையும் மறுத்துள்ளது.
இந்திய முன்னணி முதலீட்டாளரும் பங்குச் சந்தை வர்த்தகருமான டோலி கன்னா மூன்றாம் காலாண்டில் வாகன உதிரிபாகங்கள் டால்ப்ரோஸ் ஆட்டோமேட்டிவ் காம்பொனெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தனது பங்குகளை அதிகரித்துள்ளார்.
YES வங்கியானது டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, நிகர முன்பணம் (Net Advance) கிட்டத்தட்ட 4 சதவீதம் அதிகரித்து, தற்காலிக அடிப்படையில் ரூ.1,76,422 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 31, 2020 நிலவரப்படி நிகர முன்பணம் ரூ. 1,69,721 கோடியாக இருந்தது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,920.60 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 174.26 புள்ளிகள் அதிகரித்து 59,776.10 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 51.69 புள்ளிகள் அதிகரித்து 17,797.60 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 176.80 புள்ளிகள் அதிகரித்து 37,490.25 ஆகவும் வர்த்தகமானது.