இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக ஜெட் ஏர்வேய்ஸின் தாய் நிறுவனமாக கல்ராக் கேபிடல் முராரி லால் ஜலான் கன்சார்டியம் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், உழவு தொழிலின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.