தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணிகளுக்காகவும், 2 இடங்களில் களஆய்வுகளை செய்யவும், கொற்கை முன்களப் பணிகள் ஆகியவற்’றுக்கா 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தமிழக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ .20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பவல் பேசுகையில், பொருளாதார விகித உயர்வை சமாளிப்பதற்கும், தற்போதைய பணியமர்த்தல் மற்றும் ஊதிய வளர்ச்சியைத் தக்கவைக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது என்றும், மத்திய வங்கி இப்போது அதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.