2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூகஊடகமான Face Book அண்மையில் Meta என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனுடைய நிறுவனம் மார்க் ஜுகர்பெர்க் உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரர்களின் ஒருவராக உள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக மெட்டா என மாறியுள்ள Face Book பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு, TATA குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம், முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.
பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலில் பரேக் கூறுகையில், தொழில்நுட்பத் துறையில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்து கொண்டுள்ளன. ஆனால் குறுகிய காலத்தில் புதிய திறன்களைக் கற்க வேண்டிய ஒரு தொழிலாக இது இருக்கும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.