இனி நுகர்வோர் பிஸ்கட் முதல் ஷாம்பூ வரை மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு, எஃப்எம்சிஜி வகைகளைப் பொறுத்து 4 முதல் 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக உற்பத்திச் செலவுகள், கச்சா எண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆடை விற்பனைத் துறை முதலீட்டாளர்கள் 2021 ஆம் ஆண்டில் சிறப்பான லாபம் ஈட்டியுள்ளனர், ட்ரெண்ட் லிமிடெட், ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட், வி-மார்ட் ரீடெய்ல் லிமிடெட் மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகள் கடந்த ஆண்டு 45-65% என்ற அளவில் அதிகரித்தன. இது நிஃப்டி 500 குறியீட்டோடு ஒப்பிடும்போது 30%, சூழ்நிலைகள் சவாலானதாக இருந்தபோதும், இயல்பான நிலை ஏற்பட்டவுடன், சில்லறை விற்பனைப் பங்குகளுக்கான குறியீடு உயர்ந்ததாக இருந்தவுடன், வலுவான தேவை மீட்புக்கான நம்பிக்கைகளோடு காணப்பட்டது. செப்டம்பர் காலாண்டில் நிறுவனங்கள் வருவாயில் நிலையான மீட்சியைக் கண்டன.
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,548.76 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 160.57 புள்ளிகள் அதிகரித்து 59,343.79 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55.70 புள்ளிகள் அதிகரித்து 17,681.40 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 129.35 புள்ளிகள் அதிகரித்து 36,551.25 ஆக வர்த்தகமானது.
ஆயுள் காப்பீடு செய்யப் போகிறீர்களா? ஏற்கனவே செய்திருக்கிறீர்களா? அதில் இருக்கும் நுட்பமான பல விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள், விழிப்போடு இருங்கள், இல்லையென்றால் காப்பீட்டு நிறுவனங்கள் உங்களை ஏமாற்றக் கூடும், பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கும் உகன் பஸ்வானுக்கும் இடையிலான இந்த வழக்கை படித்துப் பாருங்கள், ஆட்டோ கவர் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.